டெல்லியில் இன்று நடந்த சமூக நீதி மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பெரும் தொழில் அதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கப்பட்ட ரூ.16 லட்சம் கோடியை 90 விழுக்காடு இந்தியர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும்.

இதனை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் தான் காங்கிஸிசின் தேர்தல் அறிக்கையைப் பார்த்து பிரதமர்
மோடியும், பாஜகவினரும் பயந்து Panic mode-ல் உள்ளனர்” என்றார்.