தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 38 தோட்டாக்களால் துளைக்கப்பட்ட தனது பாட்டியைப் பார்த்த பிறகும், சல்லடையாக்கப்பட்ட தனது தந்தையைப் பார்த்த பிறகும் ராகுல்காந்தி அதைச் சொல்லி வாக்குக் கேட்டதில்லை.

ஆனால் இந்திய பிரதமர் மோடி 10 லட்ச ரூபாய்க்கு கோட் சூட் போட்டுக்கொண்டு நான் ஒரு ஏழைத்தாயின் மகன் என்று நீலிக்கண்ணீர் வடித்து வாக்குக் கேட்கிறார் என நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.