தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதனால் ஏப்ரல் 26 அன்று அம்மாநிலங்களில் மதுக்கடைகள் இயங்காது.

அந்த வகையில் தமிழகத்தில், கேரள எல்லையை ஒட்டிய தேனி, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கர்நாடக எல்லையை ஒட்டிய நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.