மக்களவைத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். 2ஆம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, மகாராஷ்டிராவின் யாவத்மல் பகுதியில் கட்கரி இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டு வந்தார். அப்போது, மேடையில் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர்.