உத்திரபிரதேச மாநிலம் பார் பக்கியை சேர்ந்தவர் மிஸ்ரா (35) , இவர் தன்னுடைய சகோதரியின் திருமணத்திற்கு தங்க மோதிரம் மற்றும் டிவி வாங்கிக் கொடுக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து தன்னுடைய மனைவி சபியிடம் அவர் கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்த நிலையில் சபி தனது சகோதரர்களுக்கு போன் செய்து அவருக்கு பாடம் புகட்ட சொல்லி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து மிஸ்ரா வீட்டிற்கு வந்த அவர்கள் மிஸ்ராவை ஒரு மணி நேரம் கம்பால் அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவருடைய மனைவி மற்றும் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.