மாடுகளை வெட்டமாட்டேன் என கூறியவர் கடுமையாக தாக்கப்பட்ட காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள பரிகியில் இருந்து வாஜித் என்பவரை இறைச்சி கூடத்தில் வைத்து மாடுகளை வெட்ட அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சென்ற பின் காளைகளுக்கு பதிலாக பசு மாடுகளை வெட்ட சொல்லியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் செல்ஃபோனை திருடிவிட்டார் என பொய்யாக குற்றம் சாட்டி அவரை அடித்து உதைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசில் புகாரளித்தால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளனர்.