தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ரமேஷ், தனது உடல்நலத்தின் மீது காட்டிவரும் அதிகப்படியான ஈடுபாடு தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அவர் கையில் அணிந்திருக்கும் அதிநவீன உடற்பயிற்சி கண்காணிப்புக் கருவி குறித்த விவரங்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

அமைச்சர் ரமேஷ் தனது கையில் விலை உயர்ந்த ‘ஊப்’ ஃபிட்னஸ் டிராக்கர் கருவியை அணிந்திருந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட சாதனத்தின் சந்தைப் மதிப்பு சுமார் 45,000 ரூபாய்க்கும் அதிகம் எனக் கூறப்படும் நிலையில், இதன் ஆண்டு சந்தாக் கட்டணம் மட்டும் இந்திய மதிப்பில் கணிசமான அளவில் அதாவது சுமார் 400 டாலர்கள் வரை செலவாகிறது.

தன் இரண்டு மாத சம்பளத்திற்குச் சமமான தொகையை ஒரே ஒரு ஃபிட்னஸ் சாதனத்திற்காக அவர் செலவழித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இதர செலவுகளை அவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

“>

 

அரசியல் தலைவர்களின் எளிமை மற்றும் அவர்களின் ஆடம்பரப் பொருள்கள் பயன்பாடு குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம், இது போன்ற விலையுயர்ந்த நவீன சாதனங்கள் மீதான ஈர்ப்பு பொதுமக்களிடையே கவனத்தை ஈர்ப்பது வழக்கமாகியுள்ளது.