உசிலம்பட்டியில் விவசாயி ஒருவர் தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவரை விஷப்பாம்பு கடித்துள்ளது. தன்னை கடித்த பாம்பை பிடித்து சாக்கு பையில் வைத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தவரைக் கண்டு மருத்துவர்களும் செவிலியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

முதலுதவி பெற்ற பின் பாம்பை அருகில் வைத்துக்கொண்டு அமர்ந்து விவசாயி உணவருந்தியுள்ளார். இதனிடையே தகவலறிந்து அங்கு விரைந்த வனத்துறையிடம் அவர் அந்த பாம்பை ஒப்படைத்துள்ளார்.