திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை சேர்ந்த கஜப்பிரியா (35) ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கஜ பிரியா தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பிறகு வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.