ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வட வடகாவடகாடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம்ம் சத்துதுணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களில்  10 பேருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து பதறியடித்துக் கொண்டு, பெற்றோர்கள் சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் மருத்துவமனையே பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து, சிகிச்சை பெற்ற குழந்தைகள் நலமுடன் வீடு திரும்பினர்.