விழுப்புரம் மேல்சேவூர் அருகே அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி உதவி வழங்கியுள்ளார். அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான பிரவீன் குமார் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேருந்து விபத்தில் அம்மன்குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (16) உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். மேலும் விபத்தில் காயமடைந்த சிறுவன் வீனேஷுக்கு ரூபாய் 50,000 நிதி உதவி, சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.