நாட்டில் கடந்த சில நாட்களாக பூண்டின் விலை அதிகரித்து வருகிறது. எனவே பூண்டு வாங்குவதற்கு தங்கம் விலை கொடுக்க வேண்டியதுள்ளது என பொதுமக்கள் புலம்பி தள்ளி வருகின்றனர். இந்நிலையில் சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமக்களுக்கு பூண்டால் கட்டப்பட்ட மாலையையும், 2 கிலோ பூண்டுகளையும் நடிகர்கள் பெஞ்சமின், முகமது காசிம் ஆகியோர் மணமக்களுக்கு பரிசாக வழங்கினர். பூண்டின் விலை உயர்ந்துள்ள நிலையில் மணமக்களுக்கு பூண்டை பரிசாக வழங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.