இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரப் கங்குலியின் மொபைல் போன் திருடப்பட்டது. தற்போது கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், போனை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றார். திரும்பி வந்தபோது அது காணாமல் போய்விட்டது.

வீடு முழுவதும் தேடியும் போனைக் காணவில்லை. உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய தரவுகள் அந்த போனில் இருந்ததால் அவர் கவலை தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.