ஓய்வூதிய விதியில் மத்திய அரசு திருத்தம் செய்து உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திருமண உறவில் நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண் ஊழியர்கள் மற்றும் பெண் ஓய்வூதியர்கள் தங்கள் கணவருக்கு பதிலாக குழந்தைகளை ஓய்வூதியத்திற்கு வாரிசாக நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து மற்றும் வரதட்சனை கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் கணவர் மீது புகார் அளித்துள்ள பெண் ஊழியர் தங்களுடைய மறைவுக்குப் பிறகு ஓய்வூதியம் குழந்தைகளுக்குச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம் என மத்திய அரசு திருத்தம் செய்த புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.