அசாம் மாநிலம் கோலக்காட் என்ற மாவட்டத்தில் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டெர்கான் அருகே அதிகாலை 5 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.