அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் பேருந்தும், லாரியும் மோதி விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

கோலாகாட்டில் உள்ள டெர்கான் அருகே உள்ள பாலிஜன் பகுதியில்  அதிகாலையில் 45 பேருடன் சென்ற பேருந்து டிரக் லாரி மீது மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர விபத்து டெர்கான் அருகே உள்ள பாலிஜன் பகுதியில் அதிகாலை 5 மணியளவில் விபத்து நடந்தது. இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.