இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா அனைத்து வகையான கட்டணங்களுக்கும் ஒரே கார்டு என்ற முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேசிய காமன் மொபிலிட்டி கார்டு (NCMC) rupay ரீலோடபிள் ப்ரீபெய்டு கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ, பேருந்து, ரயில் மற்றும் வண்டி டிக்கெட்டுகளை இந்த அட்டை மூலமாக வாங்கிக் கொள்ளலாம். இந்த காண்டாக்ட் லெஸ் ப்ரீபெய்டு கார்டு டோல் மற்றும் பார்க்கிங் நேரத்திலும் பயனுள்ளதாக இருக்கும் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.