நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் இன்று அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு இன்று ஒரு நாள் தூக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.