ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரண உதவியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்திட அமைச்சர் உதயநிதி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் சிலர் ஒடிசா கிளம்பி சென்றுள்ளனர்.