ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய தமிழ்நாட்டில் இருந்து மருத்துவக் குழு, இதர உதவிகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.