திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவிளிப்பட்டியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இந்நிலையில் பிரசாந்த் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 33 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் இளம்பெண் ஆறு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரசாந்தை கைது செய்தனர். பிரசாந்துக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.