தர்மபுரி டவுன் போலீசார் ரயில் நிலையம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஐந்து பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பெண்கள் கூலி வேலை பார்த்து வந்ததாகவும், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என கூறி தினேஷ் என்பவர் இங்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவர் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது. இதனால் தினேஷை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தனியார் விடுதி மேலாளர் மணிவண்ணன், கோபால், செந்தில், சிலம்பரசன், வீராசாமி ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.