கே.சி பழனிசாமி தொடர்ந்து அவதூறு வழக்கில் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே. சி பழனிச்சாமி கட்சியின் பெயர் சின்னங்களை பயன்படுத்துகிறார், கட்சியின் பெயரை பயன்படுத்தி மிஸ்யூஸ் செய்கிறார். போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி,  சட்ட விரோதமாக பண வசூல் செய்கின்றார் என்று உரிமையியல் வழக்கை அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துக்கள் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கிறது.  எனவே எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கின் கீழ் சந்திக்க வேண்டும் என்று சென்னையில் இருக்கக்கூடிய ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி பழனிச்சாமி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  அவரது கோரிக்கை நிராகரித்து,  அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனுவில், அந்த வழக்கின் உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் கே.சி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கு தான் இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  இந்த வழக்கினுடைய எதிர்மனுதாரர் என்ற முறையில் வழக்கு குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு  நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.