தமிழக பாஜக அண்ணாமலையின் தொடர் சீண்டல்களால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி இருக்கிறது. இருந்தாலும் பாஜகவின் இந்த நடவடிக்கை நாடகம் என்று திமுகவும், அதனுடைய கூட்டணி கட்சிகளும் கூறி கூறி வருகின்றன. இருந்தாலும் பொதுமக்கள் மத்தியிலேயே அதிமுக பாஜக கூட்டணி பிரிவு குறித்து சந்தேகம் தான் இருக்கிறது.

இந்நிலையில் பாஜக தலைவர்கள் EPS தலைமையிலான கூட்டணிக்கு ஏங்குகிற ஒருதலை காதலில் தவிப்பதாகவே தனக்கு தோன்றுகிறது என்று முன்னாள் முதல்வர் OPS ஆதரவாளர் மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “INDA கூட்டணி நிர்பந்தத்தால், விருப்பமற்ற பலவற்றை கடந்த காலங்களில் ஆதரித்ததாக EPS கூறியுள்ளார். இதற்கு பதில் சொல்லாமல் பாஜக கடந்து செல்வது, அக்கட்சியின் தன்னம்பிக்கை அற்ற தன்மையை காட்டுகிறது” என்றார்.