தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சனி ஞாயிறு மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி அக்டோபர் 20 நாளை முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் இந்த நாட்களில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் இதனை மீறி விடுப்பு எடுத்தால் துணை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.