ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன்  இரண்டு ட்ரோன்களை அனுப்பி உள்ளது. இதனைப் பார்த்த ரஷ்ய விமானப்படை இரண்டு ட்ரோன்களையும்  தாக்கி அளித்தது. இது ஒரே வாரத்தில் உக்ரைன்  நடத்தும் மூன்றாவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.