சீனா நாட்டின் யூனான் மாகாணத்தில் வாலிபர் ஒருவர் திடீரென கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்டார். சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களை அவர் சரமாரியாக குத்த தொடங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட துவங்கினர். சிலர் கத்திக்குத்தில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இவரது இந்த திடீர் தாக்குதலில் ஏழு பேர் கடுகாயமடைந்த நிலையில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்து அவர் தனது தாயை கத்தியால் குத்தி விட்டு பின்னர் வெளியில் வந்து பொதுமக்களை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.