உலக நாடுகளில் உள்ள பல்வேறு தலைசிறந்த நிறுவனங்களில் இந்தியர்கள் சமீப காலமாக தடம் பதித்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் இருக்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் என்பவர் தலைமை நிதி அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்தவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வைபவுக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. வணிகவியல் பட்டம் பெற்ற வைபவ் 20 ஆண்டுகள் கணக்கியல்  துறையில் அனுபவம் பெற்றவர். இவர் தொலைதொடர்பு, சில்லறை வணிகம், தொழில்நுட்பம் என பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.