தமிழகத்தில் மாற்று திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற பயிற்றுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாத ஊதியத்தை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தொடக்க கல்வி நிலையில் பணியாற்றும் பலரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.