தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மூன்று மாதங்களாக தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதி நாளைக்குள் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேல் முறையீடு செய்த பெண்களுக்கும் விடப்பட்ட மாத தவணையுடன் இந்த மாதத்திற்கான பணம் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதமாக பதினைந்தாம் தேதிக்கு முன்னதாக வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. அதனைப் போலவே இன்று மதியத்திற்கு மேல் பணம் வரவழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.