தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புயல் பாதித்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் டிசம்பர் மாத மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் அக்டோபர் மாத மின் கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வெயில் தாக்கத்தால் அக்டோபர் மாதம் பொதுவாக மின் கட்டணம் இரண்டு மடங்கு உயரும். தற்போது அந்தக் கட்டணத்தை கட்ட சொல்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.