நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் கலர் புகை குண்டு வீச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இதை விமர்சனம் செய்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி, நாடாளுமன்ற விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. எம்பிக்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.