கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதொரசலூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமச்சந்திரன் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தமிழ்ச்செல்வன், ராஜா, ருத்ரன் உள்ளிட்ட சிலர் மதியம் எங்களிடம் ஏன் பிரச்சனை செய்தாய் என கேட்டு ராமச்சந்திரனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதே போல ராமச்சந்திரன் தரப்பினர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் இருதரப்பைச் சேர்ந்த ருத்ரன், ராஜா, ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.