கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளியில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணிற்கும் அதே பகுதியில் வசிக்கும் பொக்லைன் டிரைவரான குணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அந்த இளம்பெண் குணாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

சம்பவம் நடைபெற்ற அன்று குணா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால் குணா இளம்பெண்ணுடன் வாக்குவாதம் செய்து அவரைத் தாக்கி மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.