தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு மின்வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது. புயல் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் டிசம்பர் நான்கு முதல் ஏழாம் தேதி வரை மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இவ்வாறு கணக்கீடு மேற்கொள்ளப்படாத நுகர்வோரின் அக்டோபர் மாதம் மின் கட்டணமே டிசம்பர் மாதத்திற்கும் பொருந்தும் என்றும் அதன்படி மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் மின்வாரிய முத்தரவிட்டுள்ளது.

அதன்படி டிசம்பர் 4 முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை விண்கட்டணம் செய்த கடைசி நாளாக இருக்கும் நுகர்வோருக்கு டிசம்பர் 18ஆம் தேதி வரை அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 17 ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாளாக இருப்போர் டிசம்பர் 18ஆம் தேதி வரை அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும்.