தொடர் கனமழை காரணமாக நெல்லை மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நெல்லை மற்றும் சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே திருச்செந்தூர் -பாலக்காடு, நெல்லை மற்றும் ஜாம்நகர் இடையேயான ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிஜாமுதீன் ரயிலும் கனமழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது