தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே விருதுநகர், மதுரை, தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை ,திருவாரூர் , நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.