தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை அதிக கன மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் தொடர் கனமழையால் 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது. இதனால் அம்பாசமுத்திரம், வைராவி குளம், மணிமுத்தாறு மற்றும் கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.