தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் ஒன்பது மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவசரக்கான உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நெல்லை – 0462-2501012, தூத்துக்குடி 0461-2340101, குமரி 0465-2231077, தென்காசி 0463-3290548 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த நான்கு மாவட்ட மக்களும் 1070, 1077 போன்ற அவசர கால கட்டுப்பாட்டு மைய எண்களையும் அவசர உதவிக்கு அழைக்கலாம். மேலும் 9445869848 என்ற whatsapp எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.