தமிழகத்தில் அதிகன மழை எதிரொளியாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து சேவை கடுமையாக முடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதனைப் போலவே நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி செல்ல வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட முடியாமல் முடங்கியுள்ளனர்.