பெண் குழந்தைகளின் நலனை கருதி எல்ஐசி கன்யாடன் பாலிசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் குழந்தையின் பெற்றோர்கள் குழந்தைக்கு 1 முதல் 10 வயது வரை இருக்கும் போது பாலிசியில் முதலீடு செய்யலாம். குறைந்தது 13 முதல் 25 ஆண்டுகள் வரை பாலிசி காலமாக உள்ளது. பாலிசியில் 22 வருடங்களுக்கு பெற்றோர்கள் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 3447 ரூபாய் ப்ரீமியம் செலுத்தினால் 25 ஆண்டு கால முடிவில் 22.5 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும்.