அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்  நேற்று முன்தினம் மரணம் அடைந்து விட்டார். இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 52-ன்படி தேர்தல் ஒத்தி வைக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதன்படி, இந்த தொகுதிக்கான வாக்கு பதிவானது, 3-வது கட்ட தேர்தலின்போது நடைபெறும்.

இதனை தொடர்ந்து, மே 7-ந்தேதி பிடல் தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. (இங்கு வரும் 26ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது) வேட்பாளர் இறந்துவிட்டால் அடுத்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க கால அவகாசம் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.