அயோத்தியில் புதிதாக கட்டியுள்ள கோவிலில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவதால் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த கோவிலில் மார்ச் 1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதிலிருந்து கூட்டம் அதிகரித்து வருவதால் அதனை தவிர்ப்பதற்கு https://mandir.ae/visit என்ற இணையதளம் மூலம் தரிசன டிக்கெட்டை முன்கூட்டியே பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.