உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் ஆறு வயது சிறுமியை 11 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நான்காம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் , அதில் டியூஷனுக்கு சென்று வரும் பொழுது இந்த சிறுவன் பாதிக்கப்பட்ட சிறுமியை தனியாக அழைத்துச் சென்று கற்பழித்ததற்காக கூறியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறுகையில், என்னுடைய மகள் மாலை 7:30 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு ரத்தம் வழிந்து ஓடியது.  அவர் எப்படியோ முயற்சி செய்து நடந்ததை எங்களிடம் கூறினாள். அவளுக்கு தன்னை இந்த நிலைமைக்கு ஆளாகிய சிறுவனையும் தெரிந்துள்ளது.  உடனே என்னுடைய மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். பிறகு சிறுவனை வீட்டிற்கு சென்று அவரை போலீசிடம் அழைத்து சென்றோம் என்று கூறினார். சிறுவன் மீது போகோ சட்டமூலம் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பிறகு சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.