டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தொடங்கி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் என அடுத்தடுத்து அதிரடி கைது நடந்தது. கடைசியாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

இப்படி ஒருபுறம் மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையி ஆம் ஆத்மி கட்சி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் டெல்லி அரசில் அமைச்சராக உள்ள ராஜ் குமார் ஆனந்த் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும்  ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவிதுள்ளார்.