தமிழில் தளபதி ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நாயகியாக உயர்ந்து இப்போது ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் ஹாலிவுட் நடிகர்களுடன் நடித்திருக்கும் சிட்டாடல் வெப் தொடர் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா பேட்டி அளித்ததாவது “இந்தியில் பிரபல நடிகையாக உயர்ந்த நான் ஹாலிவுட்டுக்கு சென்றபோது எனக்கு நடிக்க வருமா என தேர்வு வைத்துத் தான் வாய்ப்பு கொடுத்தார்கள். அதனை நான் தவறாக நினைக்கவில்லை.

திரையில் மட்டுமல்லாமல் திரைக்கு பின்னாலும் இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய நடிகர்-நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஹாலிவுட்டுக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். காரணம் நம் இந்தியர்களிடம் அவ்வளவு திறமை உள்ளது” என்று அவர் கூறினார்.