பிரபல இயக்குநர் திரு. கே.பாக்யராஜ், நேற்று வெளியிட்ட வீடியோவில், “மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள அம்பரம்பாளையம் ஆற்றில் குளிக்க வருவோரை ஒரு சிலர் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்வதாகவும், அவர்களின் உடல்களை மீட்பதாக கூறி பணம் பெறுவதாகவும் கூறிஇருந்தார். இந்நிலையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் இதுகுறித்து கூறுகையில், திரு.பாக்யராஜ் அவர்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும்.

அதுபோன்ற குற்றச் சம்பவம் ஒன்றுகூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. மேலும் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள ஆற்றுப் பகுதியில் 2022- 2023ல் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவே இல்லை. வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயல்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.