வங்கதேசத்தில் உள்ள ஒரு மதரஸாவில், சிறுமி ஒருவர் தனது ஆசிரியராலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தெரியவந்ததும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நேராக மதரஸாவிற்குச் சென்று, அந்த அநாகரீக ஆசிரியரைச் செருப்பால் சரமாரியாக அடித்துத் துவம்சம் செய்துள்ளார். தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையால் ஆத்திரமடைந்த அந்தத் தாய், அந்த நபர் செய்த கொடூரத்தை அங்கே இருந்தவர்களிடம் சுட்டிக்காட்டி ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

தற்போது இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சி எக்ஸ் (X) தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் துணிச்சலைப் பாராட்டும் அதே வேளையில், இத்தகைய கொடூரச் செயல்களைச் செய்யும் மதரஸா ஆசிரியர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.