சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் கண்ணம்மாபேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைதை துரைசாமி, தனக்கு ஆறுதல் சொன்ன அத்தனை பேருக்கும் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.

எனக்கு ஒரு மகன் போனாலும், ஐஏஎஸ் படித்த மகன்கள், மகள்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் கலங்க மாட்டேன். எனது சேவையை பிரதானப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன் என சூளுரைப்பதாக கூறினார்