திருப்பத்தூர்  மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றிற்கு  பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர், பெண்ணை பரிசோதனை செய்து விட்டு பேண்ட்டை கழற்ற சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் மருத்துவர் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில், மருத்துவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல, மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய புகாரில் இளம்பெண்ணின் உறவினர்கள் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.